உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
பொன்னேரி அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது23). இவர் பொன்னேரி அடுத்த அவுரிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் சந்தியா திடீரென புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஆசிரியர் சந்தியா இறந்துபோனார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது23). இவர் பொன்னேரி அடுத்த அவுரிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் சந்தியா திடீரென புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஆசிரியர் சந்தியா இறந்துபோனார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.