உள்ளூர் செய்திகள்
கார் மோதியதில் முதியவர் பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்க ளத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை( வயது 72). இவர், வடகாடு சென்று விட்டு மீண்டும் சைக்கிளில் ராசியமங்களத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பட்டுக்கோட்டை சாலை கீழாத்தூர் அருகே வந்த போது, எதிரே வந்த கார் ஒன்று, இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யாதுரை சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.