உள்ளூர் செய்திகள்
மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது எடுத்தப்படம்

மது எடுப்பு விழா

Published On 2022-04-27 15:16 IST   |   Update On 2022-04-27 15:16:00 IST
மது எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் ஏழுபிள்ளை காளியம்மன், கண்ணக்காரன், பெரிய பிச்சையம்மாள் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் காவடி, பால்குடம் எத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்துநேர்த்திக்கடன் செலுத்தினர்.

இயைடுத்து புதுக்கோட்டை விடுதி, கும்மங்குளம், ஆயிப்பட்டி, நெம்மக்கோட்டை, பூவை மாநகர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பலர் கலந்து கொண்டு தென்னம்பாளை மற்றும் பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட குடத்தில் மது எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 

பின்னர் மது குடங்களில் உள்ள பூக்களை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு செலுத்தி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்படுகளை கிராமமக்கள் மற்றும் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Similar News