உள்ளூர் செய்திகள்
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.

பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம்

Published On 2022-04-27 14:52 IST   |   Update On 2022-04-27 14:52:00 IST
கீராநல்லூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:

கீராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக்கூட்டம் நடைபெற்றது.

தலைமையாசிரியை ஜெ.மேகலா தலைமை வகித்தார்.பத்மாவதி வரவேற்புரை ஆற்றினார். பார்வையாளராக கொள்ளிடம் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் கணேஷ் பங்கேற்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எஸ்.எம்.சிகுழு மாற்றி அமைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின் படி பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிகளை ஆ.பிரியா ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.நிகழ்ச்சி முடிவில்

சுமதி நன்றி கூறினார்.

Similar News