உள்ளூர் செய்திகள்
வழக்கு

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீசுவேன்- தருமபுரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

Published On 2022-04-27 06:12 GMT   |   Update On 2022-04-27 06:12 GMT
தருமபுரி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டல் வாலிபர் மீது போக்கோவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

வழக்கம் போல் நேற்று கல்லூரி செல்வதற்காக கெங்கலாபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். கல்லூரி பஸ் வந்ததுடன் அதில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சிவாடி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சஞ்சய் (25) என்பவர் மாணவியின் துப்பட்டாவை பிடித்து கீழே இழுத்து சாலையில் தள்ளிய அவர் தன்னை காலிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

மேலும் காதலிக்க மறுத்ததால் எந்த நேரத்திலும் ஆசிட் அடித்து விடுவேன் என்றும், பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து மாணவி இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து வாலிபர் சஞ்சயை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News