உள்ளூர் செய்திகள்
புவி தின பேரணி நடைபெற்றது.

உலக புவி தின பேரணி

Published On 2022-04-26 13:12 IST   |   Update On 2022-04-26 13:12:00 IST
திருமருகல் ஒன்றியத்தில் உலக புவி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். 

மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

Similar News