உள்ளூர் செய்திகள்
தீமிதி விழா நடந்தது.

தீமிதி திருவிழா

Published On 2022-04-26 13:10 IST   |   Update On 2022-04-26 13:10:00 IST
தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 

அப்போது மாரியம்மன் மணிமண்ட-பத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்லமுத்து மாரியம்-மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Similar News