உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பாலாபிஷேகம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை நகர பகுதியில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக அர்ஜூன் சம்பத் பிறந்தநாள் விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம், நீர்மோர், பானகம் மற்றும் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் ஜெய விஜயேந்திர சுவாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை நகர தலைவர் பிரதீப் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.