உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் உணவு-குளிர்பானங்களின் விலையை 20 சதவீதம் குறைக்க ஆலோசனை

Published On 2022-04-25 05:26 GMT   |   Update On 2022-04-25 05:26 GMT
சென்னை விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது என்று விமான பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது நடக்கும் குறைகளை விமான நிலையத்தில் புகார் தெரிவிப்பது வழக்கம்.

சென்னை விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது என்று விமான பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, இதை எப்படி சரி செய்யலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையை சுமார் 20 சதவீதம் வரை குறைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒரு பயணிக்கு ஒரு பொருளின் விலை நியாயமாக தோன்றும்போது அதுவே மற்றொரு பயணிக்கு அதிகமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாடு காரணமாக விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் விற்பனை இல்லாமல் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். எனினும் பயணிகளின் நலத்தை விரும்பியே உணவு மற்றும் குளிர்பானங்ளின் விலையை முடிந்த அளவுக்கு குறைக்க முயற்சி செய்து வருகிறோம். பாக்கெட் செய்த பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கு விற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த முனையங்கள் வர இருக்கிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வணிகத்திற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் உட்கார்ந்து சாப்பிடும் படி உணவகங்கள் அமைக்கப்படும்.

அது மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டிய பொருட்களும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இது இணைப்பு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவர்கள் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு இது உபயோகமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News