உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-04-24 09:48 GMT   |   Update On 2022-04-24 09:48 GMT
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலி:

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை திருத்தணி மார்கத்தில் வரும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாதிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளில் ஏறி சோதனை செய்த போது சுமார் 200 கிலோ ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. 

இதனையடுத்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் புத்தூரை சார்ந்த சந்திரா (38). மீது அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News