உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாணாவரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Published On 2022-04-23 15:57 IST   |   Update On 2022-04-23 15:57:00 IST
பாணாவரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம்  பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 27). கட்டிடத் தொழிலாளியாக வேலைப் பார்த்துவந்தார். இவருக்கு, மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று ராஜி பாணாவரம் அருகிலுள்ள நெரிஞ்சந்தாங்கலில் உள்ள ஒருவரது வீட்டின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவரின்கையிலிருந்த கம்பி எதிர்பாரா தவிதமாக அருகிலுள்ள மின்சார ஒயர்மீது பட்டு ராஜி தூக்கி வீசப்பட்டார். 

அங்கிருந்தவர்கள் அவரை சோளிங்கர் அரசுமருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்ததில் ராஜி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News