உள்ளூர் செய்திகள்
அரசு இசைப்பள்ளி புதிய கட்டிடம் கட்ட நடந்த அடிக்கல்

அரசு இசைப்பள்ளியில் ரூ.99 லட்சத்தில் புதிய கட்டிடம்

Published On 2022-04-23 15:49 IST   |   Update On 2022-04-23 15:49:00 IST
சீர்காழியில் அரசு இசைப்பள்ளியில் ரூ.99 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை - எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
 சீர்காழி:

சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது சொந்த கட்டிடம் இல்லாததால் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. 

குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்ததால், இசை கருவிகள் இசைக்கும் போது அருகில் உள்ள  குடியிருப்பு வாதிகளும் சிரமம் ஏற்பட்டது. 
அதனால் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு  புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சீர்காழி ரயில்வே ரோடு  ஸ்ரீநகரில் ரூ.99 லட்சத்தில்  புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பூமி பூஜை நிகழ்ச்சி சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
 
இதில் திமுக நகர செயலாளர் சுப்பராயன்,பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்கட்டிடம் நாகவேல், உதவி பொறியாளர் ஜான் டி ரோஸ்ட், இசைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், நாதஸ்வர ஆசிரியர் சிவசுப்பிரமணியன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒப்பந்தக்காரர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News