உள்ளூர் செய்திகள்
நாட்டு வெடி தயாரித்து கைதான 4 பேர்-வெடிப்பொருள்

அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த 4 பேர் கைது

Published On 2022-04-23 15:49 IST   |   Update On 2022-04-23 15:49:00 IST
வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில்அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த 4 பேர் போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகே பட்டாசு விற்பனைக்கான அனுமதி பெற்று தனியார் வாணவெடி பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து மூலப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக வைத்தீஸ்வரன்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சீர்காழி டி.எஸ்.பி லாமேக் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் சப்&இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் சென்று கடையை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கடை கீழ்த்தளத்தில் அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட பயங்கர சத்தத்துடன் வெடிக்கக் கூடிய நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து கடையின் மேல் தளத்தில் ஆய்வு செய்தபோது நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கரித்துகள்கள், இரும்பு பைப்புகள், அமோனியா சல்பர், வெடிமருந்து உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஏராளமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சுமார் 50 கிலோ எடையுள்ள பயங்கர சத்தத்துடன் வெடிக்கக்கூடிய நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளை சேர்ந்த ரமேஷ்குமார், ஆனந்தன், பழனிச்சாமி, மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News