உள்ளூர் செய்திகள்
ரூ.25 லட்சம் கடனை திருப்பி தராததால் துணி வியாபாரி காரில் கடத்தல் 5 பேர் மீது வழக்கு
ரூ.25 லட்சம் கடனை திருப்பி தராததால் துணி வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பர்கூர்,ஏப்.22-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த எமக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 30). இவர் ஐதராபாத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிந்து. பர்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் சூரி (26), தெய்வானை (45), மணி (21), முருகன் (35), கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் லட்சுமி (40) இவர்கள் அனைவரும் உறவினர்கள்.
இவர்களிடம் சிவபிரசாத் ரூ.25 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கடனாக வாங்கினார். இதற்காக ஐதராபாத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உத்தரவாத கையெழுத்து போட்டு இருந்தார்.
இந்த நிலையில் சிவபிரசாத் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் நீதிமன்றம் மூலம் என்னால் தொகையை தர இயலாது என ஐ.பி. நோட்டீஸ் பணம் வாங்கிய 5 பேருக்கும் சிவபிரசாத் அனுப்பி இருந்தார்.
இதற்கிடையே சிந்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சூரி, தெயவானை, மணி, லட்சுமி, முருகன் ஆகிய 5 பேரும் வீட்டில் இருந்த சிவபிரசாத்தை காரில் கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நட்ததினார்கள். அதில் கிருஷ்ணகிரியில் ஒரு வீட்டில் சிவபிரசாத்தை அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு ªன்ற போலீசார் சிவபிரசாத்தை மீட்டனர். இது தொடர்பாக சூரி, தெய்வாணை, மணி, லட்சுமி, முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.