உள்ளூர் செய்திகள்
.

மொபட் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2022-04-22 14:50 IST   |   Update On 2022-04-22 14:50:00 IST
சூளகிரி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
சூளகிரி,ஏப்.22-

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பெரிய தியாகரசனப்பள்ளியை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் ஓசூர் & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி மார்க்கெட் பக்கமாக மொபட்டில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். 

அப்போ அந்த வழியாக சென்ற சரக்கு வேன் சாக்கப்பா ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாக்கப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News