உள்ளூர் செய்திகள்
.

மோட்டார்சைக்கிள் மோதி நடந்து சென்ற தச்சுதொழிலாளி பலி

Published On 2022-04-22 14:46 IST   |   Update On 2022-04-22 14:46:00 IST
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற தச்சு தொழிலாளி பலியானார்.
ஓசூர்,ஏப்.22-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நூனலஹள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). தச்சு தொழிலாளி. வேலை விஷயமாக ஓசூர் வந்திருந்த அவர் கிருஷ்ணகிரி & ஓசூர் சாலையில் சீதாராம்மேடு பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் மாரியப்பன் மீது மோதினார். 

இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News