உள்ளூர் செய்திகள்
.

விவசாயி தற்கொலை

Published On 2022-04-22 14:42 IST   |   Update On 2022-04-22 14:42:00 IST
சிங்காரப்பேட்டை அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர், ஏப்.22- 

சிங்காரப்பேட்டை அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள இடகானூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 68). விவசாயி. கடன் பிரச்சினை காரணமாக அவர் கோணார்கொட்டாய் பகுதியில் நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News