உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,ஏப்.22-
தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உளள அகலகோட்டை பக்கமுள்ளது கல்லுபாலம். இந்த ஊரை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி கீதா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன் & மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கீதா தேன்கனிக்கோடடை அருகே உள்ள தொட்ட பிலிமுத்திரையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு மன வருத்தம் காரணமாக கீதா தனது பாட்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீதாவின் தாய் சுதா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா முகமது விசாரணை நடத்தி வருகிறார்.