உள்ளூர் செய்திகள்
.

வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவர் கைது

Published On 2022-04-22 14:31 IST   |   Update On 2022-04-22 14:31:00 IST
வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி, ஏப்.22-

வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). சம்பவத்தன்று சீனிவாசனின் மனைவியிடம் சுரேஷ் தகராறு செய்தார். 

இது குறித்து தட்டி கேட்ட சீனிவாசனை சுரேஷ் தாக்கினார். இதில் காயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.

Similar News