உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் புத்தகங்களை படிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் பேச்சு
கீழையூரில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பள்ளி பருவத்திலேயே அம்பேத்கர் புத்தகங்களை படிக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில், ஆறுபாதி, கீழையூர், நடுக்கரை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
நிறுவன தலைவருமான தொல் திருமாவளவன் எம்.பி. வருகை தந்தார். அப்போது கீழையூர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலை--யிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்கள் குறைகளையும்
அவ்வபோது நிறைவேற்றி வருகிறார். பா.ஜ.க ஒன்றிய அரசு தமிழகத்தில் உள்புகுந்து ஆட்களை விலைக்கு வாங்கும் நோக்கில் பல்வேறு செயல்பாட்டை நிகழ்த்தி வருகிறது.
இந்த சதிவேலையை திமுக அரசு தகர்க்க வேண்டும். மயிலாடுதுறைக்கு வந்த கவர்னர் கார்மீது கல்லெறிந்த தாகக்கூறி ஒரு அபாண்-டமான குற்றச்சாட்டை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை
என்று கூறி வருகிறார்கள். உண்மையில் அப்படி ஒரு குற்றச்சாற்று நடைபெற-வில்லை. தமிழகத்-திற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருவதாக கூறி தான் கண்டனத்தை பதிவு செய்யவே
கருப்புக்கொடி காட்டி உள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கிய 32 ஆண்டுகளில் தற்போதுதான் 4 எம்.எல்.ஏ. க்கள், 2 எம்.பி.களை பெற்றுள்ளோம். இந்த 32 ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள்
கட்சி பல்வேறு இடையூறுகளையும் நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்துயிருக்கிறது. இளைஞர்கள் அம்பேத்கார் புத்தகங்களை பள்ளிப் பருவத்திலேயே படித்து வந்தால் உலகையே
ஆளும் வல்லமையும், வளிமையும் பெற்றுவிடலாம். இந்த மண்ணில் ஆயுதம் ஏந்தி போராட தேவை இருக்காது. ஒடுக்கப்பட்ட மக்களின் சக்திகளை, எந்த சக்தியாலும் கட்டுபடுத்த முடியாது.
அம்பேத்கர் பெயரை சொல்லி இந்த மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.இசையமைப்பாளர் இளையராஜா பற்றி பேசியபோது அவர் பிறந்த காலத்திலிருந்து இன்றைய வரைக்கும்
அம்பேத்கார் படத்திற்கு மாலை போட்டு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளாரா ?தலித் மக்கள் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்துள்ளாரா?.
அவருக்கு என்ன தெரியும் அம்பேத்கரை பற்றி. அம்பேத்கார் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்று இளையராஜா சொல்வது எவ்வளவு பெரிய தவறான கூற்று. அவர் இதுபோன்றே
ஒப்பிட்டு பேசி இருக்கக் கூடாது. இதற்கு பின்னணியில் பாஜக அரசு இருந்து கொண்டு அவரை பிளாக்மெயில் செய்து, மிரட்டி அம்பேத்காரும், மோடியும் இருவரும் ஒரே நிலைப்பாட்டைகொண்டவர்கள்
என்று சொல்ல வைத்துள்ளார்கள்.மோடியை இயக்குவது ஆர். எஸ். எஸ். அந்த ஆர் எஸ் எஸ்-ஐ இயக்குவது பயங்கரவாத ஆரியர்கள். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கூட அவருடைய பிறந்த
நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் தான் திமுக அரசு சமத்துவ நாளாக அம்பேத்கர் பிறந்த நாளை அறிவித்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்தில் இந்துக்கள்
இல்லை. பௌத்தர்கள் தான் இருந்தனர். அவர்கள் கடவுள் பிரம்மா தான். ஒழுக்கம் தான் உயர்ந்தது என்ற கொள்கையுடையது. இந்தியாவில் 25 சதவீதத்திற்கு மேல் உள்ள தலித் மக்கள் பௌத்தர்களாகமாற்றிவிட்டால், இந்தியாவில் இந்துக்களே இல்லாத நிலைமை ஏற்படும். அதனால் தான் தலித் மக்களை பௌத்தர்களாக மாற்ற வேண்டும் என்று கேட்கி-றோம். அம்பேத்கர் கொள்கையும், பிஜேபிகொள்கையும் ஒன்று என்று பேசி வருவது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் துரை அசோகன்
,
விஜயராணி, திமுக மாவட்ட துணை செயலாளர் ஞான-வேலன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர்
ஈழவளவன், மண்டல செயலாளர் வேலு குணவேந்தன் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன், தொகுதி செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் அரசகுமாரன், உள்ளிட்ட திரளானவர்கள்கலந்துக்கொண்டனர்.