உள்ளூர் செய்திகள்
தளி அருகே கோழிக்குழம்பு சாப்பிட்ட சிறுவன் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோழிக்குழம்பு சாப்பிட்ட சிறுவன் பலியானான்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது48). இவரது மகன் முரளி (17). கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அகலக்கோட்டை அடுத்த போடிக் குட்டை அருகே, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட் டிருந்தார்.
பின்னர் நேற்று முன்தினம் வைத்த கோழிக் குழம்புடன் சாப்பாடு சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்ட உறவினர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், முரளி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
கோழிக்குழம்பு சாப்பிட்டபோது, நெஞ்சு பகுதியில் அடைத்து அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான், உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.