உள்ளூர் செய்திகள்
.

தேன்கனிக்கோட்டை அருகே சுடுநீர் கொட்டியதில் குழந்தை பலி

Published On 2022-04-21 14:25 IST   |   Update On 2022-04-21 14:25:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சுடுநீர் கொட்டியதில் குழந்தை பலியானது.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட தளி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது பெண் குழந்தை புண்ணியா (வயது 2).
இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கிருந்த சுடுநீர் பாத்திரத்தை பிடித்து இழுத்த போது குழந்தையின் உடலில் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்ட உறவினர்கள் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 
சுடுநீர் கொட்டி பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News