உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் பட்டமளிப்பு விழாவில் தருமபுரி மண்டல, கல்லூரிக்கல

குமாரபாளையம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

Published On 2022-04-21 06:17 GMT   |   Update On 2022-04-21 06:17 GMT
குமாரபாளையம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதன் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. 

தருமபுரி மண்டல கல்லூரிக்கல்வி இயக்குனர் எழிலன் பங்கேற்று, தமிழ் 32, ஆங்கிலம் 32, கணிதவியல் 21, கணினி அறிவியல் 9, வணிகவியல் 36 ஆக மொத்தம்  130 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் அரசு மற்றும் வங்கி சார்ந்த போட்டி தேர்வுகளில் விடா முயற்சியுடன், தன்னம்-பிக்கையுடன் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தன் மீது நம்பிக்கை வைத்து சுயதொழில்களில் ஈடுபட்டு தொழிலதிபர்களாக உயர வேண்டும் என்றார்.

விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News