உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பொது இடத்தில் ரகளை செய்த 5 பேர் கைது

Published On 2022-04-21 09:55 IST   |   Update On 2022-04-21 09:55:00 IST
கருவடிக்குப்பத்தில் பொது இடத்தில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் கருவடிக்குப்பம் சாராயக்கடை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். 

அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த விநாயகம்(வயது55), சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன்(51), குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த ராம்(60), நாவற்குளம் வசந்தம் நகரை சேர்ந்த ஏழுமலை(51) மற்றும் முத்தியால்பேட்டை முத்தையா முதலியார்வீதியை சேர்ந்த செல்லப்பன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News