உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நடுரோட்டில் மயங்கி விழுந்தவர் சாவு

Published On 2022-04-21 09:53 IST   |   Update On 2022-04-21 09:53:00 IST
நடுரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தவர் இறந்து போனார்.
புதுச்சேரி:

புதுவை ரங்கப்பிள்ளை வீதி-காந்தி வீதியில் ஒரு தனியார் அரிசி கடை அருகில்  50 வயது மதிக்கதக்க ஒருவர் திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 

உடனே அங்கிருந்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி மணிகண்டன்(வயது28) என்பவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்தவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவரிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்த போது அவர் பெயர் மூர்த்தி என்றும் ஈரோட்டை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மூர்த்தி சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News