உள்ளூர் செய்திகள்
டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினர்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Published On 2022-04-20 15:45 IST   |   Update On 2022-04-20 15:45:00 IST
கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் துளசேந்-திரபுரம் அரசு மேனிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

முகாமினை மாவட்டக்கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.வட்டார வள மைய மேற்பார்-வையாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். 

மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கொள்ளிடம் காவல் துறை ஆய்வாளர் அமுதாராணி மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் பழனிவேல் வட்டார கவ்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனிவாசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சீர்காழி வட்டார வளமைய” மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் மயிலாடுதுறை மேற்பார்வையாளர் முருகையன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பானுசேகர் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் குத்துவிளக்கி ஏற்றி துவக்கி வைத்தார்கள்.மாற்றுத்திறானாளி மாணவர்கள் மரக்-கன்றுகளை நட்டனர்.

முகாமிற்கு, எலும்பு முறிவு மருத்துவர் அறிவழகன், காது மருத்துவர் ஜான்சிராணி, கண் மருத்துவர் பூபேஸ் தர்மேந்திரா, மனநல மருத்துவர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ-ர்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக்ஞானராஜ் பாக்ய லெட்சுமி அபூர்வராணி கவிதா அறிவரசு தலைமை ஆசிறியர்கள் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

உணவினை கொள்ளிடம், ரோட்டரி சங்கம் சீர்காழி ரோட்டரி டெம்புள் டவுன் கொள்ளிடம் கண்காணிப்பாளர் இளங்காவன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சீர்காழி டெம்பிள்டன் ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறன்.

 குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொட்டலங்களை அதன் தலைவர் ஆறுமுகம் நிர்வாகிகள் துரை, மோகனசுந்தரம், ரவிச்சந்திரன் மலர் கண்ணன் உள்ளிட்டோர் வழங்கினர். 

முகாமில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட 124 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

இறுதியாக பிசியோதெரபி இயன்முறை மருத்துவர் மலர்கண்ணன் நன்றி கூறினார்.

Similar News