உள்ளூர் செய்திகள்
நார் தயாரிக்கும் தொழிற்சாலை தீ விபத்து பல லட்சம் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணி ஹள்ளி பஞ்சாயத்திற்கு அருகில் பெரமன் கொட்டாய் கிராமத்தின் அருகே மாதையன் (வயது 45) என்பவருக்கு சொந்தமான நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் தொழிற் சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சாலைக்கு வெளியே வந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குதீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், நார் மற்றும் கயிறுகள், முழுவதுமாக எரிந்த நிலையில் இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் என்று கூறப் படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.