உள்ளூர் செய்திகள்
புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கினார்.

வ.உ.சிதம்பரனார் புகைப்பட கண்காட்சி வாகனம் தொடக்கம்

Published On 2022-04-19 15:58 IST   |   Update On 2022-04-19 15:58:00 IST
மயிலாடுதுறையில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு பற்றிநகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய

வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்-கையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்படக்

கண்காட்சி மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு தெடர்ந்து மயிலாடுதுறை டி.ஜி.என் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட

பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும்.தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்-பட்டுள்ளது. இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுதந்திர

போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும்.
 
முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்ப ரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்-காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளஅவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின்சார்பில் கலெக்டர்

லலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்-செல்வராஜ், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி,

பள்ளி தலைமை ஆசிரியர் லீமா ரோஸ், தமிழ்நாடு மாநில வ.உ.சி. பேரவை தலைவர் பண்ணை சொக்கலிங்கம் மற்றும் திரளான பள்ளி மாணவி-யர்கள் கலந்துக் கொண்டனர்.

Similar News