உள்ளூர் செய்திகள்
சிப்காட் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
சிப்காட் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 55). இவரது மகள் அம்மு (35).
இவர்கள் இருவரும் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை கோவிலுக்கு பைக்கில் சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் பைக்கில் மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.
அப்போது திடீரென்று அம்மு ஓட்டி வந்த பைக் பிரேக் பிடிக்க முடியாமல் நிலைதடுமாறி உள்ளது. இதில் பைக் பின்னால் அமர்ந்து சென்ற சாந்தி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த சாந்தியை உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.