உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாணாவரம் அருகே வாகனம் மோதி மான் பலி

Published On 2022-04-18 16:00 IST   |   Update On 2022-04-18 16:00:00 IST
பாணாவரம் அருகே வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமம் கூட்ரோடு அருகே நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது மதிக்கத்தக்க பெண்மான் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் பெண்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.பிறகு அதே பகுதியில் மானை அடக்கம் செய்தனர்.

Similar News