உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
சூளகிரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பாப் பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளியை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கூலித் தொழிலாளி. வேலை விஷயமாக சூளகிரி வந்திருந்த அவர் ஓசூர், கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி யில் தனியார் லாட்ஜ் அருகில் நடந்து சென்று கொண் டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.