உள்ளூர் செய்திகள்
குட்கா, கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருவெறும்பூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் இதனையடுத்து திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தெற்கு காட்டூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த நகுலன் (வயது56) மற்றும் திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (66) ஆகியோர் குட்கா விற்றது தெரியவந்தது.
மேலும் இதனையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் தெற்கு காட்டூர் குறிஞ்சி நகர் முதல் தெரு வரை சேர்ந்த முருகேசனின் மகன் சூர்யா (22) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது எனவே இந்த மூவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.