உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காடு திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ்குமார் (வயது 23) என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.