உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்
ஆலங்குளம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஒன்றிய பொதுநிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகத் தெருவில் அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் பால் விநாயகம், துணை தலைவர் வேல்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் அரி நாராயணன், சண்முகராம், மாவட்ட கவுன்சிலர் சுதா, நகர வர்த்தக அணி கணேஷ்பாண்டியன், வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.