உள்ளூர் செய்திகள்
காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல்- வாலிபர் கைது
கண்டாச்சிபுரத்தில் காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில், தடைசெய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் 18 சாக்கு மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சங்கர் (வயது 35) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி பகுதியில் இருந்து அனந்தபுரத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனந்தபுரத்தை சேர்ந்த ஏழுமலை, அஜித் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 218 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் வந்து புகையிலை பொருட்களை பார்வையிட்டு, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டினார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில், தடைசெய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் 18 சாக்கு மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சங்கர் (வயது 35) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி பகுதியில் இருந்து அனந்தபுரத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனந்தபுரத்தை சேர்ந்த ஏழுமலை, அஜித் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 218 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் வந்து புகையிலை பொருட்களை பார்வையிட்டு, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டினார்.