உள்ளூர் செய்திகள்
சித்ரா பவுர்ணமி பாதுகாப்புக்கு வேலூரில் இருந்து 300 போலீசார் பயணம்
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி பாதுகாப்புக்கு வேலூரில் இருந்து 300 போலீசார் பயணம் சென்றனர்.
வேலூர்:
திருவண்ணாமலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து தமிழக அரசு பல்வேறு தலர்வுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து சித்ரா பௌர்ணமி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி மற்றும் 3 டிஎஸ்பி தலைமையில் 300 போலீசார் இன்று நேதாஜி மைதானத்திலிருந்து பஸ்கள் மூலம் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.