உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெமிலி அருகே இடிதாக்கி வாலிபர் பலி

Published On 2022-04-14 15:17 IST   |   Update On 2022-04-14 15:17:00 IST
நெமிலி அருகே இடிதாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த, கரிவேடு கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. 

அப்போது இடி மின்னல் தாக்கியதில் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகன் தீபக் (27) மற்றும் ராமஜெயம் மகன் குணசேகரன் (28) இருவரும் அருகில் இருந்த மரத்தடிக்கு சென்றுள்ளனர்.

அப்போது இடி தாக்கி குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீபக் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். 

இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News