உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் மகாராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிளைவ் பஜார் ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.