உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

Published On 2022-04-13 15:31 IST   |   Update On 2022-04-13 15:31:00 IST
மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கடலில் யாரும் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதனை மீன் பிடி தடை காலமாக நடைமுறையில் உள்ளது. மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்படும்.

 
அதன்படி இந்த ஆண்டில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும்.

இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மேற்கண்ட காலத்தில் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News