உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் கொங்கனாஞ்சேரி -எழுச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.