உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-04-13 09:18 GMT   |   Update On 2022-04-13 09:18 GMT
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடுக்கக்காடு ஏடி காலனியை சேர்ந்தவர் ராமையா (வயது 77). இவர், இதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் தனது  இருசக்கர வாகனத்தில் ராமையாவை ஏற்றிக் கொண்டு வெட்டன்விடுதி கடைத் தெருவிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ராமையா துடிதுடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் ராஜ்குமார் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News