உள்ளூர் செய்திகள்
மழை

சென்னை-புறநகர் பகுதியில் காலையில் லேசான மழை

Published On 2022-04-13 12:27 IST   |   Update On 2022-04-13 12:27:00 IST
தாம்பரம், மண்ணிவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பெருங்ளளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை கொட்டியது.

தாம்பரம்:

சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

படப்பை, முடிச்சூர், ஆதனூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. இதேபோல் தாம்பரம், மண்ணிவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பெருங்ளளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், மற்றும் வாகன ஒட்டிகள் நனைந்தபடி சென்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சிறிது நேரத்துக்கு பின்னர் மேகமூட்டங்கள் மறைந்து மீண்டும் வெயில் வாட்டியது.

Similar News