உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெமிலி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-04-12 15:19 IST   |   Update On 2022-04-12 15:19:00 IST
நெமிலி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கீழ் வெண்பாக்கம் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து.

இவரது மனைவி தோப்பம்மாள் (வயது52). இவர் நேற்று காலை வழக்கம் போல பனப்பாக்கம் ரோட்டில் உள்ள முந்திரி தோப்பு அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.அங்கே இருந்தவர்கள் அவரை மீட்டு பனப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நெமிலி சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News