உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் விவசாயி உள்பட 8 பேர் கைது
மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள கம்மம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ரங்கன் (65) என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2&ந்தேதி அன்று மீண்டும் இவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்கேயன் மற்றும் ரங்கன் ஆகிய இருதரப்பினர்களும் மோதி தாக்கியுள்ளனர்.
இது குறித்து மகாராஜாகடை போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், ரங்கன், பாஞ்சாலி, செந்தில்குமார், விஜயா மற்றும் கார்த்திக்கேயன், லோகநாதன், காந்தா, கல்பனா ஆகிய 8 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.