உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பலி

Published On 2022-04-11 15:48 IST   |   Update On 2022-04-11 15:48:00 IST
அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்த ணியை அடுத்த அகூர் கிரா மத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அன்பரசன் (வயது 35). திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

அன்பரசன் திருவள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று விடுமுறை என் பதால் திருத்தணி பகுதியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது திருத்தணி இச்சிபுத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அன்பரசன் மீது மோதியது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News