உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஜோதிராவ் புலே பிறந்த நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2022-04-11 06:41 GMT   |   Update On 2022-04-11 06:41 GMT
ஒடுக்கப்பட்டோர், பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்கச் செய்ததில் மட்டுமல்லாது சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் ஜோதிராவ் புலே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மிகப்பெரும் சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களில் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த நாளில் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

ஒடுக்கப்பட்டோர், பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்கச் செய்ததில் மட்டுமல்லாது சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் ஜோதிராவ் புலே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஆவார்.

அவர் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News