உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் அருகே வெயில் தாக்கத்தால் முதியவர் சாவு

Published On 2022-04-10 08:49 GMT   |   Update On 2022-04-10 08:49 GMT
அரக்கோணம் அருகே வெயில் தாக்கத்தால் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:

சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் மன உளைச்சலாக உள்ளதால் திருப்பதி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தவர் 2  நாட்களாக அங்கேயே நகரில் சுற்றியிருந்தார். பொது மக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் சுற்றி வந்தவர் சரியான உணவு கிடைக்காமல் இருந்ததால் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து இறந்தாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News