உள்ளூர் செய்திகள்
ரவுடிகளை கண்காணித்து கைது செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகள் பட்டியல் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் ரவுடிகளை கண்காணிக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து பணம் பறிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றுபோலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் அரக்கோணம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறுகையில்:-
கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும்.
ரவுடிகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல்கள் தெரிவித்தால் அவர்களின் ரகசியம் காக்கப்படும்.
ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆகியோரை தேடி கண்டுபிடிக்கும் பணிகளை போலீசார் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றார்.