உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு இன்று கோலப் போட்டி நடந்தது.

திருநங்கைகள் தின விழா

Published On 2022-04-08 16:21 IST   |   Update On 2022-04-08 16:21:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகள் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்-கினார். 

இதனையொட்டி திருநங்கைகளுக்கு கோலப் போட்டி நடனப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் திருநங்கைகள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. 

இதில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கலெக்டர் பரிசு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் திருநங்கை-களுக்கு தொழில் கடன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:- 
திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. 
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. அவர்கள் வாழ்வில் முன்னேற தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ஆர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார், சமூகநலத்துறை அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News