உள்ளூர் செய்திகள்
வேலூரில் டாஸ்மாக்கடை எதிர்த்து பெண்கள் போராட்டம்- திறக்ககோரி மதுபிரியர்கள் ஆவேசம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும் அதனைத் திறக்க கோரி ஆண்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை கடந்த வாரம் திறக்கப்பட்டது.
குறிஞ்சி நகர், முல்லை நகர், நேதாஜி நகர், மந்தைவெளி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை ஒட்டியே ஏராளமான வீடுகள் உள்ளன.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். மதுப்பிரியர்கள் போதையில் தெருக்களில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்வார்கள். திருட்டு வழிப்பறி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடை மூடப்பட்டது.
இந்நிலையில், அந்த பகுதியில் டாஸ்மாக் கடை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க கடைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது . இது அப்பகுதி மக்களிடம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மாதர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையால் பெண்கள், மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும். உடனடியாக இதனை மூட வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த 25-க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை பாலாற்று பகுதிக்கு விரட்டினர். அப்போது குடிமகன்கள் எங்களால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நாங்கள் குடிக்கவில்லை என்றால் இலவச திட்டங்களை அமல்படுத்த முடியாது. எனவே டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. குடிமகன்கள் 3 பேரை போலீசார் சட்டையை பிடித்து இழுத்து வந்தனர்.
அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து வேண்டும் வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும் என கோஷமிட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும் அதனைத் திறக்க கோரி ஆண்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை கடந்த வாரம் திறக்கப்பட்டது.
குறிஞ்சி நகர், முல்லை நகர், நேதாஜி நகர், மந்தைவெளி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை ஒட்டியே ஏராளமான வீடுகள் உள்ளன.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். மதுப்பிரியர்கள் போதையில் தெருக்களில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்வார்கள். திருட்டு வழிப்பறி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடை மூடப்பட்டது.
இந்நிலையில், அந்த பகுதியில் டாஸ்மாக் கடை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க கடைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது . இது அப்பகுதி மக்களிடம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மாதர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையால் பெண்கள், மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும். உடனடியாக இதனை மூட வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த 25-க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை பாலாற்று பகுதிக்கு விரட்டினர். அப்போது குடிமகன்கள் எங்களால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நாங்கள் குடிக்கவில்லை என்றால் இலவச திட்டங்களை அமல்படுத்த முடியாது. எனவே டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. குடிமகன்கள் 3 பேரை போலீசார் சட்டையை பிடித்து இழுத்து வந்தனர்.
அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து வேண்டும் வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும் என கோஷமிட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும் அதனைத் திறக்க கோரி ஆண்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.